ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Monday, May 17, 2010

Harshini Dance Show

Harshini Dance Show may 8th 2010- Dallas

Saturday, May 8, 2010

அம்மா அம்மா அம்மா


அம்மா அம்மா அம்மா

எல்லாருக்கும் அம்மாவை பிடிக்கும் ஹர்ஷினிக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்...அவ அம்மா மாதிரியேன்னு யாராவது சொல்லிட்டா ரொம்ப சந்தோசம் படுவா... ஆனா அவ அப்பா மாதிரியே தான் :-) .............ஹர்ஷினி இந்த வருடம் அவ பள்ளியில் எனக்கா செய்து வந்த கிப்ட்ஸ்..ஒரு பென்சில் ஸ்டேண்டும், ஒரு வாழ்த்து அட்டையும்...

பென்சில் ஸ்டேண்ட் :-
ஒரு நாள் தக்காளி சாஸ் டின் வேணும்னு அடம்பிடித்து ஸ்குலுக்கு எடுத்துட்டு போன நேத்து பாத்தா அது ஒரு அழகிய பென்சில் ஸ்டேண்டா வந்துருக்கு. அதில் அவளுடைய சின்ன சின்ன படங்கள் எல்லாம் ஒட்டி ரொம்ப அழகா இருந்தது.

வாழ்த்து அட்டை:-

போன வாரம் அவ ஒம்வார்க் கதவில் இருந்த்து எத்தனை அடி தூரத்தில் பிரிஜ் இருக்கிறது என அவளுடைய கால் அடியை கவுண்ட் செய்ய சொல்லி வந்தது...அதையே என் வெயிட்டாக போட்டு இருந்தது எனக்கு சந்தோசம் என்னா 20 பவுண்ட் தானாம் :-)




இந்த வருடமும் விலைமதிக்க முடியாத பரிசுகள்...இன்னும் நாளைக்கும் தொடரும்...


எல்லாம் குடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்





...............................................

Sunday, March 21, 2010

ஹர்ஷினி Dance

ஹர்ஷினி ஜனவரியில் நடந்த India Nite 2010, Tx -ல் அவளின் நடனம்...6 மாதமாக தான் Dance கிளாசுக்கு போகிறாள்..5 வருடம் ஆனதும் பரதநாட்டியம் கற்றுகொள்ள ஆரம்பித்து இருக்கிறாள்.

Wednesday, January 27, 2010

Birthday photos




Sunday, January 24, 2010

HAPPY BIRTHDAY

HARSHINI

பிறந்தநாள் வாழ்த்துகள்

Saturday, December 19, 2009

கிருஸ்மஸ் கிப்ட்ஸ்











ஹர்ஷினியின் ஸ்கூல் மற்றும் எக்ஸ்ட்ரா கிளாசஸ் ஆசிரியர்கள் எல்லாருக்கும் ஹர்ஷினி குடுத்த கிருஸ்மஸ் கிப்ட்ஸ்...இதை எல்லாம் செய்தது ஹர்ஷினி அம்மா தான் :-)

Friday, November 13, 2009

Harshini @ Pumpkins






ஹர்ஷினியுடனே நேரம் சரியாக இருப்பதால் ஹர்ஷினிக்காக பதிவுகூட போட முடிவதில்லை :-)...போன மாதம் ஹலோவின் டேக்காக அவங்க ஸ்குலே பம்கின் விசிட் இருந்தது அதிலே இருந்து இவங்க இந்த பாட்டையே தான் பாடிட்டு இருப்பாங்க.





5 Little Pumpkins

5 little pumpkins sitting on a gate
The first one said, "Oh, my it's getting late!"
The second one said, "There are bats in the air."
The third one said, "But we don't care."
The fourth one said, "Let's run and run and run."
The fifth one said, "I am ready for some fun!"

Then whooosh went the wind and out went the lights!
Five little pumpkins rolled out of sight.










<<<<<<<<<<<...................>>>>>>>>>>>>>>.

Monday, August 24, 2009

குரங்கும் முதலையும் (The Crocodile and The Monkey)

நதி சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு நாவல் பழம் மரம் தன்னிடத்தே பழங்களை நிரப்பிக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு குரங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பழங்களைத் தின்று கொட்டைகளைத் துப்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு முதலை வந்தது. மேலே இருந்த குரங்கு முதலைக்கும் கொடுத்துச் சாப்பிட நினைத்து, "முதலையாரே! ஏன் களைப்பாக இருக்கிறாய்? இந்த நாவல் பழம் தின்று பார், நல்ல சுவையுடன் இனிப்பாக இருக்கும், உடல் மிக தெம்பாக ஆகும்" என்றது. முதலையும் அவைகளைத் தின்றுவிட்டு பின் நன்றி தெரிவித்த்து. அன்றிலிருந்து அது தினமும் வர, குரங்குடன் நட்பு கொண்டது. ஒரு நாள் அந்த முதலை தன் மனைவிக்கும் பல நாவற்பழங்கள் எடுத்துச்சென்றது. "ஆஹா என்ன் தித்திப்பு! எங்கிருந்து கொண்டு வந்தாய்? என்றது பெண் முதலை.
"ஒரு மரத்திலிருந்து தான்"

"கீழே விழுந்தவைகளைப் பொறுக்கினாயா? மண்ணாக இருக்குமே"

மரம் ஏறினாயா? உன்னால் எப்படி மரம் ஏற முடியும்? நீ எப்படி மரம் ஏறினாய்?"

"நான் ஏறவில்லை, என் குரங்கு நண்பன் பறித்துக்கொடுத்தான். அவன் மரத்திலிருந்து புதுப்ப்ழங்களாகப் பறித்துப் போட்டான்"

"ஓ! அதுதான் நீ தினமும் நாழி கழித்து வீடு வருகிறாயா? அது சரி, இந்தப்ப்ழம் இத்தனை ருசியாக இருக்கிறதே, இதைத் தின்னும் அந்தக் குரங்கின் மாமிசம் எத்தனை ருசியாக இருக்கும்? அதன் இதயம் எத்தனை இனிப்பாக இருக்கும்? எனக்கு அந்த நண்பனின் இதயம் நிச்சயம் வேண்டும். அதை ருசி பார்க்கும் ஆசை எனக்கு வந்து விட்டது"

"அவன் என் நண்பன், அவனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்"

"எனக்கு அது கிடைக்கவில்லை என்றால் நான் பட்டினி கிடப்பேன். எனக்கு அதைக் கொண்டு வந்து தரவேண்டும்"

ஆண் முதலை எத்தனை சொல்லியும் கேட்காமல் பெண் முதலை பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் முதலை தன் நண்பனிடம் சென்றது. பின் குரங்கிடம் "அருமை நண்பா, என் மனைவி உன்னைக் காண விரும்புகிறாள், என் வீட்டிற்கு வாயேன்" என்றது.

குரங்கும், "நான் வர ரெடிதான், ஆனால் என்னால் நதியில் நீந்த முடியாது, மூழ்கிப் போய்விடுவேனே" என்றது.

அதற்கு முதலை "கவலைப்படாதே, நான் இருக்கும் போது என்ன கவலை? என் முதுகில் ஏறி அமர்ந்துக்கொள், நாங்கள் நிலத்திலும் இருப்போம், நீரிலும் இருப்போம். என் மனைவிக்கு நாகப்பழங்கள் மட்டும் பறித்து பின் என் முதுகில் ஏறிக்கொள்"



இப்படியாக குரங்கு முதலையின் முதுகில் மஜவாக வலம் வர, முதலையும் நிலத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்ட பின் சொல்லியது, "நண்பா, என் மனைவிக்கு உன் இதயம் வேண்டுமாம், நாவற்பழத்தின் ருசி இதய்த்திலும் இருக்கும் என்று எண்ணி அதைக் க்டித்துத் தின்ன ஆசைப்படுகிறாள், அதனால் தான் உன்னை அழைத்து வந்தேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை, உண்மை இதுதான். அவள் ஆசைக்கு எதிராக எனக்கு ஒன்றும் பேச முடியவில்லை"

ஒரு நிமிடம் குரங்கு ஆடிப்போனாலும் சமாளித்து தன் புத்தியைத் தீட்டியது, பின் சொல்லியது, "அருமை நண்பா! உன் மனைவிக்கு என் இதயம் தர நான் தயார் தான். ஆனால் இப்போது அது என்னிடம் இல்லை. நான் என் இதயத்தைக் கழட்டி மரத்தில் வைத்துவிட்டு வ்ந்திருக்கிறேன். நான் வெளியில் போகும் போது அதை மரத்தில் அவிழ்த்து வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. என்னைத் திருமப மரத்திற்கு அழைத்துப்போ, அதை நான் உனக்கே தருகிறேன்'

முட்டாள் முதலையும் இதை நம்பி குரங்கை மரத்தின் அடியில் அழைத்துப் போயிற்று. அவ்வளவு தான், ஒரே ஜம்ப் , மரத்தின் உச்சிக்குப் போய் விட்டது குரங்கு, "அட முட்டாளே! யாராவது இதயத்தை எடுத்துவிட்டு உயிருடன் இருக்க முடியுமா? போ, போ, உன் வீடு போய்ச் சேர், நண்பனாக இருந்து துரோகம் செய்யத் துணிந்தாயே," என்றது.

முதலையும் ஏமாற்றத்துடன் தன் வீடு திரும்பியது.


The Crocodile and The Monkey


Friday, August 21, 2009

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

வீதி தோறும் குல்லாதான் வித்து வந்தான் வியாபாரி

அலைஞ்ச களைப்புத் தீரவே பத்து நிமிடம் தூங்கினான்

கொஞ்ச நேரம் போனது குரங்கு கூட்டம் சேர்ந்தது

ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்தாய் எடுத்தது

குல்லாய் எடுத்த குரங்கது குதிச்சு குதிச்சு ஆடுது

கண்ணயர்ந்த வியாபாரி கண்விழித்து பார்த்தானே

குல்லாய் இன்றி போகவே குரங்கை நோக்கி ஓடினான்

என்ன செய்தும் குரங்கது குல்லாய் தர மறுத்தது

சற்று நேரம் யோசித்தான் சரியான வழி கிடைத்தது

தலையில் இருந்த குல்லாயை குரங்கை நோக்கி வீசினான்

குல்லா கண்ட குரங்கது கோபத்துடன் பார்த்தது

ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்து எரிந்தது

குல்லாய் எடுத்த வியாபாரி குரங்கை விடுத்து ஓடினான்

Friday, August 14, 2009

இந்திய நாடு நம் நாடு..



ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம் (x 2)

ஈஸ்வர அல்லா தேரே நாம்
சபுகோ சன்மதி தே பகவான் (x2) (ரகுபதி...)

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம் (*2)




ரகுபதி ராகவ ராஜா ராம, கரதே ஸபகா காம தமாம
ஸரபஂச,ஏம.ஏல.ஏ.யா ஏம.பீ குச தோ முஜே பநா பகவாந ॥
ஏக பார திலவாதே குர்ஸீ ,பிர ஸபகீ கரவா தூஂ குர்கீ
முஜகோ பீ ரோஜகார மிலேகா,தேரா காரோபார சலேகா
ஜோ பீ ஆதா தேரீ காதா, சூஂஸ-சூஂஸ ஜநதா கோ காதா
நேதாஓஂ கே பாரே கொதாம,காம கரேஂ ந ஏக சதாம
உஸநே ஸபகோ தியா ஹை தோகா, முஜகோ பீ தோ தே தே மௌகா
ஸப ஆஸ்வாஸந தேரே நாம,ரகுபதி ராகவ ராஜா ராம....॥
காஂதீ தேரா லேகர நாம,கூப கியா ஜக மேஂ பதநாம
ரிஸ்வத கோரோஂ கா ஹை மோல, ஸச போலோ தோ பிஸ்தர கோல
கோடாலோஂ பர ஜாஂச கா தாலா, குர்ஸீ தேரா கேல நிராலா
குர்ஸீ மைய்யா குர்ஸீ பாப,மந மைல பர குர்தா ஸாப
பூரே கர மேரே அரமாந, ரகுபதி ராகவ ராஜா ராம....॥
அஂதேர நகரீ சோபட ராஜா, அப தோ பஜா தே உநகா பாஜா
காயா அப தக ஜிதநா உஸநே ,பூரா நஹீஂ திலாதே ஆதா
பூக கரீபீ ஔர கஂகாலீ ஜைஸே நேதா ஜீ கீ ஸாலீ
பூகே பஜந ந ஹோய கோபாலா, தேரீ பஸல கா கயா லாலா
அப தோ ஸுந லோ ஸ்ரீ பகவாந, ரகுபதி ராகவ ராஜா ராம....॥

சுகந்திர தின வாழ்த்துகள்

Tuesday, August 11, 2009

தமிழ்குழந்தை பாடல்கள்

காக்கா கண்ணுக்கு மை

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே குழந்தைக்கு பழம் கொண்டு வா

**************************************************************

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து பறந்து வா
சேவல் கோழி ஓடி வா
கூவி எழுப்பிட ஓடி வா
கிளியே கிளியே பறந்து வா
கிள்ளை மொழி பேசி வா
பப்பி நாய்க்குட்டியே ஓடி வா
பந்தை வாயில் கௌவி வா
வெள்ளை பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பாலும் கொண்டு வா

************************************************************

வெள்ளை நிற முயலக்கா

வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சின்னஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய்த் தோன்றும் முயலக்கா

*********************************************************

தோ தோ நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வரும் நாய்க்குட்டி
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி
பாசம் காட்டும் நாய்க்குட்டி
கறிகள் தின்னும் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி
விரும்பும் நல்ல நாய்க்குட்டி

**********************************************************

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
தாவி வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவாயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்னிடத்தில்
பள்ளம் மேடு வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வருமே ஆட்டுக்குட்டி
*******************************************************
குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்.

தமிழ்குழந்தை பாடல்கள்
***********************************************************

Monday, August 10, 2009

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்றது வெள்ளை பசு உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளை பசு

பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி

முட்டிக்கொடுக்குது கன்றுக்குட்டி

Monday, August 3, 2009

பூச்சாண்டி

Wednesday, July 15, 2009

ஹர்ஷினியின் கை வண்ணம்




அப்பாகள் நாள் வந்ததும் ஹர்ஷினி அவ அப்பாவுக்கு எதாவது கிராப்ட் பன்னி குடுக்க வேண்டும்னு ஒரே அடம்.... ஏன்னா அம்மாகளின் நாளுக்கு ஸ்குலில் ஒரு வாரம் முழுவதும் இதே வேளை தான்...சரின்னு அதே மாதிரி ஒரு போட்டோ பிரேமும், டிசர்ட் பெயிண்டிங்கும் பன்னினாள்.

ஹர்ஷினி அப்பாவுக்கு அந்த டிசர்ட்டை பார்த்ததும் ரொம்ப பிடித்து விட்டது.... பார்க்கும் எல்லாரிடமும் ஹர்ஷினி எனக்கு அவளே பன்னினதுன்னு ஒரு படம் காட்டிட்டு இருக்காரு.

இதே ஹர்ஷினியின் கை வண்ணம்.

போட்டோ பிரேம்

முதலில் பிரேம் முழுவதும் ஒரு கலர் அடித்துவிட்டு பின் அதில் போம் பிரசில் கலர் செய்து அதில் பூக்கள் , பட்டாம்பூச்சி எல்லாம் ஒட்டிக்கொள்ளலாம்.



டிசர்ட் டிசைன்

ஹர்ஷினியிம் உள்ளங்கய்யில் போயிட் போட்டு அதை பதித்து அதை மீன் போல வரைந்து கலர் பன்னி இருக்கிறாள்.

Tuesday, June 9, 2009

ஹர்ஷினி

ஹர்ஷினி பார்க்கில் இருந்து வந்ததும் பார்க் எப்படி இருந்த்து என கேட்டதற்க்கு அவ ஏதோ ஒரு பாட்டு பாடினா நானும் முதலில் ஏதோ பாடுறான்னு நினைத்தேன் அப்புறம் தான் தெரிந்தது அவ என்ன செய்தாலோ அதையே பாட்டா பாடுறான்னு :-)

Thursday, June 4, 2009

One Two Buckle My Shoe

Friday, May 29, 2009

Twinkle Twinkle

ஹர்ஷினிக்கு மட்டும் இல்லை எங்கள் அனைவருக்கும் பிடித்த இந்த பாடல் ... ரேவதி சங்கர் ரொம்ப நல்லா பன்னி இருப்பாங்க.... இதை பாத்த பின் ஹர்ஷினியும் எல்லா பாடலையும் மாத்தி பாட ஆரம்பிச்சுட்டா :-)

Wednesday, May 13, 2009

@.ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

இரண்டு முகத்தில் கண் இரண்டு

மூன்று முக்காலிக்குக் கால் மூன்று

நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு

ஐந்த் ஒருகை விரல் ஐந்து

ஆறு ஈயின் கால் ஆறு

ஏழு வாரத்தின் நாள் ஏழு

எட்டு சிலந்தியின் கால் எட்டு

ஒன்பது தானியம் வகை ஒன்பது

பத்து இருகை விரல் பத்து

Saturday, May 9, 2009

அம்மாக்காக ஒரு நாள்



ஹர்ஷினி எனக்கு குடுத்த பரிசுக்கள்... எல்லாமே அவளே பன்னியது.


நான் அம்மா ஆனா பிறகு என் அம்மாவை எனக்கு அதிகமாக பிடிக்கும்..

நான் சிறு வயதில் செய்த குறும்பை அதட்டிய அம்மா...!

ஹர்ஷினி செய்யும் குறும்பை ரசிக்கும் போது என் அம்மாவை இன்னும் ரொம்ப பிடிக்கும்.

ஹர்ஷினி இந்த வாரம் முழுவதும் எனக்காக எதாவது கிப்ட் செய்துட்டு வருவாள்

அவள் பிஞ்சு கைகளால் எனக்கே எனக்காக என அவள் பன்னி வரும் எல்லாமே எனக்கு கிடைத்த விளை மதிக்க முடியாத பொக்கிசங்கள்

அதை என்னிடம் கொடுத்து I LOVE MOM -ன்னு சொல்லும்போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வரும்

என்னை இப்போது இங்கு மட்டும் இல்லாமல் நிறைய இடங்களில் ஹர்ஷினி அம்மா எனவே என் பெயர் ஆகிவிட்டது :-)

ஹர்ஷினி அடிக்கடி சொல்லுவா ” நான் அம்மா மாதிரியே” -ன்னு .

அம்மாக்களின் நாளில் நான் என் அம்மாவையும், ஹர்ஷினியையும் எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல பல.

Thursday, April 16, 2009

@.குறை ஒன்றும் இல்லை



குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா....
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா(குறை..)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா(கலிநாளு..)

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா