ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Tuesday, August 11, 2009

தமிழ்குழந்தை பாடல்கள்

காக்கா கண்ணுக்கு மை

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே குழந்தைக்கு பழம் கொண்டு வா

**************************************************************

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து பறந்து வா
சேவல் கோழி ஓடி வா
கூவி எழுப்பிட ஓடி வா
கிளியே கிளியே பறந்து வா
கிள்ளை மொழி பேசி வா
பப்பி நாய்க்குட்டியே ஓடி வா
பந்தை வாயில் கௌவி வா
வெள்ளை பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பாலும் கொண்டு வா

************************************************************

வெள்ளை நிற முயலக்கா

வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சின்னஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய்த் தோன்றும் முயலக்கா

*********************************************************

தோ தோ நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வரும் நாய்க்குட்டி
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி
பாசம் காட்டும் நாய்க்குட்டி
கறிகள் தின்னும் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி
விரும்பும் நல்ல நாய்க்குட்டி

**********************************************************

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
தாவி வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவாயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்னிடத்தில்
பள்ளம் மேடு வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வருமே ஆட்டுக்குட்டி
*******************************************************
குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்.

தமிழ்குழந்தை பாடல்கள்
***********************************************************

2 comments:

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

ம்ம்....... பாலவாடி போனதெல்லாம் ஞாபகம் வருது . நன்றி

Malini's Signature said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ”கிறுக்கல் கிறுக்கன்” :-)

எல்லாம் மறக்காமே இருக்கவே இந்த பகுதி...