ஹர்ஷினி

நான் வளர்கிறேன் அம்மா

Lilypie - Personal pictureLilypie

Saturday, December 19, 2009

கிருஸ்மஸ் கிப்ட்ஸ்











ஹர்ஷினியின் ஸ்கூல் மற்றும் எக்ஸ்ட்ரா கிளாசஸ் ஆசிரியர்கள் எல்லாருக்கும் ஹர்ஷினி குடுத்த கிருஸ்மஸ் கிப்ட்ஸ்...இதை எல்லாம் செய்தது ஹர்ஷினி அம்மா தான் :-)

Friday, November 13, 2009

Harshini @ Pumpkins






ஹர்ஷினியுடனே நேரம் சரியாக இருப்பதால் ஹர்ஷினிக்காக பதிவுகூட போட முடிவதில்லை :-)...போன மாதம் ஹலோவின் டேக்காக அவங்க ஸ்குலே பம்கின் விசிட் இருந்தது அதிலே இருந்து இவங்க இந்த பாட்டையே தான் பாடிட்டு இருப்பாங்க.





5 Little Pumpkins

5 little pumpkins sitting on a gate
The first one said, "Oh, my it's getting late!"
The second one said, "There are bats in the air."
The third one said, "But we don't care."
The fourth one said, "Let's run and run and run."
The fifth one said, "I am ready for some fun!"

Then whooosh went the wind and out went the lights!
Five little pumpkins rolled out of sight.










<<<<<<<<<<<...................>>>>>>>>>>>>>>.

Monday, August 24, 2009

குரங்கும் முதலையும் (The Crocodile and The Monkey)

நதி சலசலவென்று ஓடிக்கொண்டிருந்தது. அருகில் ஒரு நாவல் பழம் மரம் தன்னிடத்தே பழங்களை நிரப்பிக்கொண்டிருந்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு குரங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பழங்களைத் தின்று கொட்டைகளைத் துப்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த மரத்தின் கீழ் ஒரு முதலை வந்தது. மேலே இருந்த குரங்கு முதலைக்கும் கொடுத்துச் சாப்பிட நினைத்து, "முதலையாரே! ஏன் களைப்பாக இருக்கிறாய்? இந்த நாவல் பழம் தின்று பார், நல்ல சுவையுடன் இனிப்பாக இருக்கும், உடல் மிக தெம்பாக ஆகும்" என்றது. முதலையும் அவைகளைத் தின்றுவிட்டு பின் நன்றி தெரிவித்த்து. அன்றிலிருந்து அது தினமும் வர, குரங்குடன் நட்பு கொண்டது. ஒரு நாள் அந்த முதலை தன் மனைவிக்கும் பல நாவற்பழங்கள் எடுத்துச்சென்றது. "ஆஹா என்ன் தித்திப்பு! எங்கிருந்து கொண்டு வந்தாய்? என்றது பெண் முதலை.
"ஒரு மரத்திலிருந்து தான்"

"கீழே விழுந்தவைகளைப் பொறுக்கினாயா? மண்ணாக இருக்குமே"

மரம் ஏறினாயா? உன்னால் எப்படி மரம் ஏற முடியும்? நீ எப்படி மரம் ஏறினாய்?"

"நான் ஏறவில்லை, என் குரங்கு நண்பன் பறித்துக்கொடுத்தான். அவன் மரத்திலிருந்து புதுப்ப்ழங்களாகப் பறித்துப் போட்டான்"

"ஓ! அதுதான் நீ தினமும் நாழி கழித்து வீடு வருகிறாயா? அது சரி, இந்தப்ப்ழம் இத்தனை ருசியாக இருக்கிறதே, இதைத் தின்னும் அந்தக் குரங்கின் மாமிசம் எத்தனை ருசியாக இருக்கும்? அதன் இதயம் எத்தனை இனிப்பாக இருக்கும்? எனக்கு அந்த நண்பனின் இதயம் நிச்சயம் வேண்டும். அதை ருசி பார்க்கும் ஆசை எனக்கு வந்து விட்டது"

"அவன் என் நண்பன், அவனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்"

"எனக்கு அது கிடைக்கவில்லை என்றால் நான் பட்டினி கிடப்பேன். எனக்கு அதைக் கொண்டு வந்து தரவேண்டும்"

ஆண் முதலை எத்தனை சொல்லியும் கேட்காமல் பெண் முதலை பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் முதலை தன் நண்பனிடம் சென்றது. பின் குரங்கிடம் "அருமை நண்பா, என் மனைவி உன்னைக் காண விரும்புகிறாள், என் வீட்டிற்கு வாயேன்" என்றது.

குரங்கும், "நான் வர ரெடிதான், ஆனால் என்னால் நதியில் நீந்த முடியாது, மூழ்கிப் போய்விடுவேனே" என்றது.

அதற்கு முதலை "கவலைப்படாதே, நான் இருக்கும் போது என்ன கவலை? என் முதுகில் ஏறி அமர்ந்துக்கொள், நாங்கள் நிலத்திலும் இருப்போம், நீரிலும் இருப்போம். என் மனைவிக்கு நாகப்பழங்கள் மட்டும் பறித்து பின் என் முதுகில் ஏறிக்கொள்"



இப்படியாக குரங்கு முதலையின் முதுகில் மஜவாக வலம் வர, முதலையும் நிலத்திலிருந்து வெகுதூரம் வந்து விட்ட பின் சொல்லியது, "நண்பா, என் மனைவிக்கு உன் இதயம் வேண்டுமாம், நாவற்பழத்தின் ருசி இதய்த்திலும் இருக்கும் என்று எண்ணி அதைக் க்டித்துத் தின்ன ஆசைப்படுகிறாள், அதனால் தான் உன்னை அழைத்து வந்தேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை, உண்மை இதுதான். அவள் ஆசைக்கு எதிராக எனக்கு ஒன்றும் பேச முடியவில்லை"

ஒரு நிமிடம் குரங்கு ஆடிப்போனாலும் சமாளித்து தன் புத்தியைத் தீட்டியது, பின் சொல்லியது, "அருமை நண்பா! உன் மனைவிக்கு என் இதயம் தர நான் தயார் தான். ஆனால் இப்போது அது என்னிடம் இல்லை. நான் என் இதயத்தைக் கழட்டி மரத்தில் வைத்துவிட்டு வ்ந்திருக்கிறேன். நான் வெளியில் போகும் போது அதை மரத்தில் அவிழ்த்து வைத்துவிட்டுப் போகும் வழக்கம் உண்டு. என்னைத் திருமப மரத்திற்கு அழைத்துப்போ, அதை நான் உனக்கே தருகிறேன்'

முட்டாள் முதலையும் இதை நம்பி குரங்கை மரத்தின் அடியில் அழைத்துப் போயிற்று. அவ்வளவு தான், ஒரே ஜம்ப் , மரத்தின் உச்சிக்குப் போய் விட்டது குரங்கு, "அட முட்டாளே! யாராவது இதயத்தை எடுத்துவிட்டு உயிருடன் இருக்க முடியுமா? போ, போ, உன் வீடு போய்ச் சேர், நண்பனாக இருந்து துரோகம் செய்யத் துணிந்தாயே," என்றது.

முதலையும் ஏமாற்றத்துடன் தன் வீடு திரும்பியது.


The Crocodile and The Monkey


Friday, August 21, 2009

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

குரங்கும் குல்லாய் வியாபாரியும்

வீதி தோறும் குல்லாதான் வித்து வந்தான் வியாபாரி

அலைஞ்ச களைப்புத் தீரவே பத்து நிமிடம் தூங்கினான்

கொஞ்ச நேரம் போனது குரங்கு கூட்டம் சேர்ந்தது

ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்தாய் எடுத்தது

குல்லாய் எடுத்த குரங்கது குதிச்சு குதிச்சு ஆடுது

கண்ணயர்ந்த வியாபாரி கண்விழித்து பார்த்தானே

குல்லாய் இன்றி போகவே குரங்கை நோக்கி ஓடினான்

என்ன செய்தும் குரங்கது குல்லாய் தர மறுத்தது

சற்று நேரம் யோசித்தான் சரியான வழி கிடைத்தது

தலையில் இருந்த குல்லாயை குரங்கை நோக்கி வீசினான்

குல்லா கண்ட குரங்கது கோபத்துடன் பார்த்தது

ஆளுக்கொரு குல்லாயை அடுத்தடுத்து எரிந்தது

குல்லாய் எடுத்த வியாபாரி குரங்கை விடுத்து ஓடினான்

Friday, August 14, 2009

இந்திய நாடு நம் நாடு..



ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம் (x 2)

ஈஸ்வர அல்லா தேரே நாம்
சபுகோ சன்மதி தே பகவான் (x2) (ரகுபதி...)

ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்
ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதாராம்

ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம் (*2)




ரகுபதி ராகவ ராஜா ராம, கரதே ஸபகா காம தமாம
ஸரபஂச,ஏம.ஏல.ஏ.யா ஏம.பீ குச தோ முஜே பநா பகவாந ॥
ஏக பார திலவாதே குர்ஸீ ,பிர ஸபகீ கரவா தூஂ குர்கீ
முஜகோ பீ ரோஜகார மிலேகா,தேரா காரோபார சலேகா
ஜோ பீ ஆதா தேரீ காதா, சூஂஸ-சூஂஸ ஜநதா கோ காதா
நேதாஓஂ கே பாரே கொதாம,காம கரேஂ ந ஏக சதாம
உஸநே ஸபகோ தியா ஹை தோகா, முஜகோ பீ தோ தே தே மௌகா
ஸப ஆஸ்வாஸந தேரே நாம,ரகுபதி ராகவ ராஜா ராம....॥
காஂதீ தேரா லேகர நாம,கூப கியா ஜக மேஂ பதநாம
ரிஸ்வத கோரோஂ கா ஹை மோல, ஸச போலோ தோ பிஸ்தர கோல
கோடாலோஂ பர ஜாஂச கா தாலா, குர்ஸீ தேரா கேல நிராலா
குர்ஸீ மைய்யா குர்ஸீ பாப,மந மைல பர குர்தா ஸாப
பூரே கர மேரே அரமாந, ரகுபதி ராகவ ராஜா ராம....॥
அஂதேர நகரீ சோபட ராஜா, அப தோ பஜா தே உநகா பாஜா
காயா அப தக ஜிதநா உஸநே ,பூரா நஹீஂ திலாதே ஆதா
பூக கரீபீ ஔர கஂகாலீ ஜைஸே நேதா ஜீ கீ ஸாலீ
பூகே பஜந ந ஹோய கோபாலா, தேரீ பஸல கா கயா லாலா
அப தோ ஸுந லோ ஸ்ரீ பகவாந, ரகுபதி ராகவ ராஜா ராம....॥

சுகந்திர தின வாழ்த்துகள்

Tuesday, August 11, 2009

தமிழ்குழந்தை பாடல்கள்

காக்கா கண்ணுக்கு மை

காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி கொண்டைக்கு பூ கொண்டு வா
கொக்கே குழந்தைக்கு பால் கொண்டு வா
கிளியே குழந்தைக்கு பழம் கொண்டு வா

**************************************************************

காக்கா காக்கா பறந்து வா

காக்கா காக்கா பறந்து வா
காலையில் எழுந்து பறந்து வா
சேவல் கோழி ஓடி வா
கூவி எழுப்பிட ஓடி வா
கிளியே கிளியே பறந்து வா
கிள்ளை மொழி பேசி வா
பப்பி நாய்க்குட்டியே ஓடி வா
பந்தை வாயில் கௌவி வா
வெள்ளை பசுவே விரைந்து வா
பிள்ளைக்கு பாலும் கொண்டு வா

************************************************************

வெள்ளை நிற முயலக்கா

வெள்ளை நிற முயலக்கா
வெளியே வந்து பாரக்கா
சின்னஞ்சிறு கைகளால்
செடியைத் தின்னும் முயலக்கா
அங்கும் இங்கும் ஓடினாலும்
அழகாய்த் தோன்றும் முயலக்கா

*********************************************************

தோ தோ நாய்க்குட்டி

தோ தோ நாய்க்குட்டி
துள்ளி வரும் நாய்க்குட்டி
பாலைக் குடிக்கும் நாய்க்குட்டி
பாசம் காட்டும் நாய்க்குட்டி
கறிகள் தின்னும் நாய்க்குட்டி
காவல் காக்கும் நாய்க்குட்டி
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
வாட்டம் போக்கும் நாய்க்குட்டி
வீட்டைச் சுற்றும் நாய்க்குட்டி
விரும்பும் நல்ல நாய்க்குட்டி

**********************************************************

ஆட்டுக்குட்டி

துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
தாவி வரும் ஆட்டுக்குட்டி
பள்ளி செல்ல வருவாயோ?
பாடம் சொல்லித் தருவாயோ?
கள்ளம் இல்லை உன் மனதில்
கபடம் இல்லை உன்னிடத்தில்
பள்ளம் மேடு வந்தாலும்
பாய்ந்து ஓடும் ஆட்டுக்குட்டி
தொல்லை இல்லா ஆட்டுக்குட்டி
தோல் கறுத்த ஆட்டுக்குட்டி
சொல்லைக் கேட்டு வீட்டையே
சுற்றி வருமே ஆட்டுக்குட்டி
*******************************************************
குருவி பாட்டு

குருவி பறந்து வந்ததாம்
குழந்தை அருகில் நின்றதாம்
பாவம் அதற்குப் பசித்ததாம்
பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்
குருவி அந்த நெல்லையே
கொத்திக் கொத்தித் தின்றதாம்
பசியும் நீங்கிப் பறந்ததாம்
பாப்பா இன்பம் கொண்டதாம்.

தமிழ்குழந்தை பாடல்கள்
***********************************************************

Monday, August 10, 2009

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு ஒன்று

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்றது வெள்ளை பசு உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

நாவால் நக்குது வெள்ளை பசு

பாலை நன்றாய் குடிக்குது கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு மடி

முட்டிக்கொடுக்குது கன்றுக்குட்டி

Monday, August 3, 2009

பூச்சாண்டி

Wednesday, July 15, 2009

ஹர்ஷினியின் கை வண்ணம்




அப்பாகள் நாள் வந்ததும் ஹர்ஷினி அவ அப்பாவுக்கு எதாவது கிராப்ட் பன்னி குடுக்க வேண்டும்னு ஒரே அடம்.... ஏன்னா அம்மாகளின் நாளுக்கு ஸ்குலில் ஒரு வாரம் முழுவதும் இதே வேளை தான்...சரின்னு அதே மாதிரி ஒரு போட்டோ பிரேமும், டிசர்ட் பெயிண்டிங்கும் பன்னினாள்.

ஹர்ஷினி அப்பாவுக்கு அந்த டிசர்ட்டை பார்த்ததும் ரொம்ப பிடித்து விட்டது.... பார்க்கும் எல்லாரிடமும் ஹர்ஷினி எனக்கு அவளே பன்னினதுன்னு ஒரு படம் காட்டிட்டு இருக்காரு.

இதே ஹர்ஷினியின் கை வண்ணம்.

போட்டோ பிரேம்

முதலில் பிரேம் முழுவதும் ஒரு கலர் அடித்துவிட்டு பின் அதில் போம் பிரசில் கலர் செய்து அதில் பூக்கள் , பட்டாம்பூச்சி எல்லாம் ஒட்டிக்கொள்ளலாம்.



டிசர்ட் டிசைன்

ஹர்ஷினியிம் உள்ளங்கய்யில் போயிட் போட்டு அதை பதித்து அதை மீன் போல வரைந்து கலர் பன்னி இருக்கிறாள்.

Tuesday, June 9, 2009

ஹர்ஷினி

ஹர்ஷினி பார்க்கில் இருந்து வந்ததும் பார்க் எப்படி இருந்த்து என கேட்டதற்க்கு அவ ஏதோ ஒரு பாட்டு பாடினா நானும் முதலில் ஏதோ பாடுறான்னு நினைத்தேன் அப்புறம் தான் தெரிந்தது அவ என்ன செய்தாலோ அதையே பாட்டா பாடுறான்னு :-)

Thursday, June 4, 2009

One Two Buckle My Shoe

Friday, May 29, 2009

Twinkle Twinkle

ஹர்ஷினிக்கு மட்டும் இல்லை எங்கள் அனைவருக்கும் பிடித்த இந்த பாடல் ... ரேவதி சங்கர் ரொம்ப நல்லா பன்னி இருப்பாங்க.... இதை பாத்த பின் ஹர்ஷினியும் எல்லா பாடலையும் மாத்தி பாட ஆரம்பிச்சுட்டா :-)

Wednesday, May 13, 2009

@.ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று

இரண்டு முகத்தில் கண் இரண்டு

மூன்று முக்காலிக்குக் கால் மூன்று

நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு

ஐந்த் ஒருகை விரல் ஐந்து

ஆறு ஈயின் கால் ஆறு

ஏழு வாரத்தின் நாள் ஏழு

எட்டு சிலந்தியின் கால் எட்டு

ஒன்பது தானியம் வகை ஒன்பது

பத்து இருகை விரல் பத்து

Saturday, May 9, 2009

அம்மாக்காக ஒரு நாள்



ஹர்ஷினி எனக்கு குடுத்த பரிசுக்கள்... எல்லாமே அவளே பன்னியது.


நான் அம்மா ஆனா பிறகு என் அம்மாவை எனக்கு அதிகமாக பிடிக்கும்..

நான் சிறு வயதில் செய்த குறும்பை அதட்டிய அம்மா...!

ஹர்ஷினி செய்யும் குறும்பை ரசிக்கும் போது என் அம்மாவை இன்னும் ரொம்ப பிடிக்கும்.

ஹர்ஷினி இந்த வாரம் முழுவதும் எனக்காக எதாவது கிப்ட் செய்துட்டு வருவாள்

அவள் பிஞ்சு கைகளால் எனக்கே எனக்காக என அவள் பன்னி வரும் எல்லாமே எனக்கு கிடைத்த விளை மதிக்க முடியாத பொக்கிசங்கள்

அதை என்னிடம் கொடுத்து I LOVE MOM -ன்னு சொல்லும்போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வரும்

என்னை இப்போது இங்கு மட்டும் இல்லாமல் நிறைய இடங்களில் ஹர்ஷினி அம்மா எனவே என் பெயர் ஆகிவிட்டது :-)

ஹர்ஷினி அடிக்கடி சொல்லுவா ” நான் அம்மா மாதிரியே” -ன்னு .

அம்மாக்களின் நாளில் நான் என் அம்மாவையும், ஹர்ஷினியையும் எனக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றிகள் பல பல.

Thursday, April 16, 2009

@.குறை ஒன்றும் இல்லை



குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா....
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா(குறை..)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திறையின் பின் நிற்கின்றாய் கண்ணா- உன்னை
மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா(கலிநாளு..)

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

Tuesday, March 31, 2009

அலைபாயுதே கண்ணா....






அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்(அலைபாயுதே....)


நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று(நிலை....)


நேரமாவதறியாமலே மிக வினோதமாக
முரளீதரா என் மனம் (அலைபாயுதே கண்ணா....)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே -
உன்திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே(கனிந்த....)

கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே(கண்கள்....)

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா(கதித்த...)

உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா(உருக்களித்த....)

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ(கரைகடல்....)

கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ(கதறி....)

இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ(இது தகுமோ....)

குழலூதிடும் பொழுடு ஆறிடும் குறைகள் போலவே மனதில்வேதனை மிகவுற
(அலைபாயுதே......)

காக்கைச் சிறகினிலே....




காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியனிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கை)

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

(காக்கை)

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

(காக்கை)

Monday, March 23, 2009

Barney Song

இது ஹர்ஷினிக்கு ரொம்ப பிடித்த பாடல் எப்பவும் வந்து பாடிட்டே கட்டிபிடிப்பா, சில நேரம் துங்கும்போதும் இந்த பாட்டை பாட சொல்லுவா, அவளுக்கு 10 மாதத்தில் இருந்து இன்னும் பிடிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

I love you
You love me
We're a happy family
With a great big hug
And a kiss from me to you
Won't you say you love me too?

I love you
You love me
We're best friends
Like friends should be
With a great big hug
And a kiss from me to you
Won't you say you love me too?



தீராத விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)

3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத)

4. பின்னலைப் பின்னின் றிழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)

5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத)

6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத)

7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;
இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)

8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)

9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)

Friday, March 13, 2009

நல்லதோர் வீணை செய்தே.....

Get this widget | Track details | eSnips Social DNA



நல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

(நல்லதோர்)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

(நல்லதோர்)

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ (2)

(நல்லதோர்)

Wednesday, March 4, 2009

ஹர்ஷினி Dance

ஹர்ஷினிக்கு இரண்டு வருடம் 6 மாதம் ஆனதும் பெங்களுரீல் இருக்கும் ஒரு பிலே ஸ்குலுக்கு 4 மாதம் போனாள். அதுதான் ஹர்ஷினிக்கு முதல் ஸ்குல் அனுபவம், அப்ப எங்க வீட்டுலேயும் ஒரு அபியும் நானும், மாதிரி ஹர்ஷினியும் நாங்கலும் போன கதை வேற...... ஆன அவ ஸ்குல் ரொம்ப எஞ்சாய் பன்னினா.. usa - லே இருந்து அங்கு போகும் போது சரியா பேச கூட தெரியாது அவளுக்கு ஆனா அப்பறம் நடந்த ஸ்குல் டேயில் அவ மேடையில் ஏறியதும் எங்கள் கண்கள் கலங்கிவிட்டன.அவ எங்களை பார்த்தால் மேடையில் இருந்து இறங்கி வந்துவிடுவால் என எங்களை மறைந்து இருந்து பாக்க சொன்னாங்க ...ஆனா அவ எங்களை பாத்துட்டா...எங்களுக்கு ஒரே சந்தோசம் தாங்கலே..ஆனா அவ இப்பவும் கேப்பா ”ஏம்மமா என்னை பாத்து அழுதீங்க”ன்னு....:-)


இதோ நீங்களும் பாருங்க ஹர்ஷினியை.




Saturday, February 28, 2009

@.சின்னஞ் சிறு கிளியே







சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!

என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!

அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந்தேனே!

ஓடி வருகையில் - கண்ணம்மா
உள்ளங் குளிரு தடீ!

ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ!

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!

மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்கு தடீ!

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!

உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்த மாகு தடீ!


உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரங் கொட்டு தடீ!

என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ...

Thursday, February 26, 2009

Wednesday, February 25, 2009

@.ஓடி விளையாடு பாப்பா



ஓடி விளையாடு பாப்பா நீ
ஒய்ந்திருக்கலாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்க படுத்தி கொள்ளு பாப்பா

@.பொம்மை பொம்மை

என் பொம்மு குட்டிக்காக ஒரு பொம்மை பாடல்.

அவளுக்கு பாட்டு என்றால் ரொம்ப பிடிக்கும்.
எப்பொதும் எதாவது பாடிட்டேதான் இருப்பா.
அவளுக்காக இந்த முறை ஊருக்கு போகும் போது நிறைய தமிழ் பாடல்கள் எல்லாம் கத்துக்க வேண்டியதா இருந்தது :-), இந்த பாடல் அவ ஆடிட்டே பாடினா பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கும் இதோ அதில் இருந்து ...


பொம்மை பொம்மை பொம்மை பார்!

புதிய புதுய பொம்மை பார்!

கையை வீசும் பொம்மை பார்!

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்!

தலையை ஆட்டும் பொம்மை பார்!

தாளம் போடும் பொம்மை பார்!

எனக்குக் கிடைத்த பொம்மை போல்!

எதுவும் இல்லை உலகிலே!

@.மாம்பழமாம் மாம்பழம்



மாம்பழமாம் மாம்பழம்

மல்கோவா மாம்பழம்

சேலத்து மாம்பழம்

தித்திக்கும் மாம்பழம்

அழகான மாம்பழம்

தங்கநிற மாம்பழம்

உங்களுக்கு வேண்டுமா

இங்கே ஓடி வாருங்கள்

பங்கு போட்டுத் தின்னலாம்

Tuesday, February 24, 2009

@.கைவீ சம்மா கைவீசு




கைவீ சம்மா கைவீசு!
கடைக்குப் போகலாம் கைவீசு!
மிட்டாய் வாங்கலாம் கைவீசு!
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு!

சொக்காய் வாங்கலாம் கைவீசு!
சொகுசாய்ப் போடலாம் கைவீசு!
கோயிலுக்குப் போகலாம் கைவீசு!
கும்பிட்டு வரலாம் கைவீசு!

@.அம்மா இங்கே வா வா




அம்மா இங்கே வா வா

ஆசை முத்தம் தா தா

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போல நல்லார்

ஊரில் யாரும் இல்லை

என்னால் உனக்குத்தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயம் இன்றிச் சொல்வேன்

ஒற்றுமை என்றும் உயர்வாம்

ஓதும் செயலே நலமாம்

ஔவை சொன்ன மொழியாம்

அஃதே எனக்கு வழியாம்.

@.நிலா நிலா ஓடிவா



நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.

@.தோசையம்மா தோசை



தோசையம்மா தோசை;

அம்மா சுட்ட தோசை;

அரிசி மாவும் உளுந்த மாவும்

கலந்து சுட்ட தோசை;

அப்பாவுக்கு நாலு;

அம்மாவுக்கு மூணு;

அண்ணனுக்கு ரெண்டு;

பாப்பாவுக்கு ஒண்ணு;

தின்னத் தின்ன ஆசை

திருப்பிக் கேட்டா பூசை.

@ .அணிலே அணிலே










அணிலே அணிலே ஓடி வா

அழகிய அணிலே ஓடி வா;

கொய்யா மரம் ஏறி வா

குண்டுப்பழம் கொண்டு வா;

பாதிப்பழம் உன்னிடம்

மீதிப் பழம் என்னிடம்;

கூடிக்கூடி இருவரும்

கொறித்துக் கொறித்துத் தின்னலாம்