Tuesday, March 31, 2009
காக்கைச் சிறகினிலே....
காக்கைச் சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரியனிறம் தோன்றுதையே நந்தலாலா
(காக்கை)
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
(காக்கை)
கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
(காக்கை)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment