Tuesday, March 31, 2009
அலைபாயுதே கண்ணா....
அலைபாயுதே கண்ணா என் மனமிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்(அலைபாயுதே....)
நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று(நிலை....)
நேரமாவதறியாமலே மிக வினோதமாக
முரளீதரா என் மனம் (அலைபாயுதே கண்ணா....)
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே -
உன்திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே(கனிந்த....)
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே(கண்கள்....)
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா(கதித்த...)
உருக்களித்த மனத்தை அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா(உருக்களித்த....)
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கடலென களிக்கவோ(கரைகடல்....)
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ(கதறி....)
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ(இது தகுமோ....)
குழலூதிடும் பொழுடு ஆறிடும் குறைகள் போலவே மனதில்வேதனை மிகவுற
(அலைபாயுதே......)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
thanks for sharing.. i was looking for this lyrics.. :)
Post a Comment