Tuesday, February 24, 2009
@.அம்மா இங்கே வா வா
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போல நல்லார்
ஊரில் யாரும் இல்லை
என்னால் உனக்குத்தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றிச் சொல்வேன்
ஒற்றுமை என்றும் உயர்வாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment